ADDED : ஆக 17, 2026 02:39 AM
அ நிறம் | அளவு
செம்பியம்: வியாசர்பாடி, இந்திரா காந்தி நகரைச் சேர்ந்தவர் பெருமாள், 40; பெயின்டர். இவரது மனைவி பிரியதர்ஷினி, கருத்து வேறுபாடு காரணமாக, இரு குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வியாசர்பாடி பகுதியில் ஒரு வீட்டில் பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெருமாள், திடீரென மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, பெரியார் நகர் மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. செம்பியம் போலீசார், விசாரிக்கின்றனர்.
