/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அம்பத்துாரில் பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு
/
அம்பத்துாரில் பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு
ADDED : பிப் 22, 2026 06:13 AM

அம்பத்துார்: 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அம்பத்துார் ஓ.டி., அருகே, ராக்கி திரையரங்கம் பகுதியில் நேற்று, தேர்தல் பிரசாரம் செய்தார்.
அவரை வரவேற்க, அம்பத்துார், ஆவடி பகுதிகளைச் சேர்ந்த, 6,000க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., தொண்டர்கள் திரண்டனர்.
மேலும், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநிலச் செயலர் அப்துல் ரஹீம், 10,000க்கும் மேற்பட்ட சாக்லெட்டால் செய்யப்பட்ட ஆளுயர சாக்லெட் மாலையை, பழனிசாமிக்கு அணிவித்து, வெள்ளி வாளை பரிசாக அளித்தார்.
முன்னதாக, பழனிசாமி வரும் வழியில், மலர் துாவி, வாண வேடிக்கையுடன் பிரம்மாண்ட வரவேற்பும் அளிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை, அ.தி.மு.க., வர்த்தக அணி மாநில துணைச் செயலர் சிவகுமார் செய்திருந்தார்.

