sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பரந்துார் டி.ஆர்.ஓ., மாற்றம்

/

பரந்துார் டி.ஆர்.ஓ., மாற்றம்

பரந்துார் டி.ஆர்.ஓ., மாற்றம்

பரந்துார் டி.ஆர்.ஓ., மாற்றம்


ADDED : அக் 09, 2024 12:23 AM

Google News

ADDED : அக் 09, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் சுற்றுவட்டார பகுதிகளில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான நில எடுப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

விமான நிலையம் அமைக்க, 3,774 ஏக்கர் தனியார் நிலங்களும், 1,972 ஏக்கர் அரசு நிலங்களையும் தமிழக அரசு கையகப்படுத்த உள்ளது.

நில எடுப்பு பணிகளை, வருவாய் துறை மேற்கொண்டு வரும் நிலையில், 3 மாவட்ட வருவாய் அலுவலர்களின்கீழ், 24 யூனிட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று மாவட்ட வருவாய் அலுவலர்களில், 3வது டிவிஷனின் மாவட்ட வருவாய் அலுவலராக, பேபி இந்திரா என்பவர் பணியாற்றி வந்தார்.

அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக, மதுரையில் உள்ள மாநில வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல அலுவலரான அருண்சத்யா என்பவரை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us