sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

படுமோசமான பொது கழிப்பறை சீரமைக்க பயணியர் கோரிக்கை

/

படுமோசமான பொது கழிப்பறை சீரமைக்க பயணியர் கோரிக்கை

படுமோசமான பொது கழிப்பறை சீரமைக்க பயணியர் கோரிக்கை

படுமோசமான பொது கழிப்பறை சீரமைக்க பயணியர் கோரிக்கை


ADDED : அக் 06, 2025 03:02 AM

Google News

ADDED : அக் 06, 2025 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்: பொது கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, மாநகராட்சி வணிக வளாகம் செயல்படுகிறது.

தினமும் இங்கு திரளானோர் வந்து செல்வதால், அவர்களது பயன்பாட்டிற்காக, வளாகத்திலேயே பெண்களுக்கான கழிப்பறை ஒன்று, ஆண்களுக்காக இரண்டு கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது, வளாகத்தின் உள்ளே இருப்பதால், யாருக்கும் தெரிவதில்லை.

பகுதிமக்களின் நலனை கருத்தில் வைத்து, எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே, சில மாதங்களுக்கு முன், ஆண்கள், பெண்களுக்கு என, தலா ஒரு சிறுநீர் கழிப்பறைகள் அமைக்கப்பட்டன.

ஆனால், ஒரு சில மாதங்களிலே, தண்ணீர் பற்றாக்குறை, பயன்படுத்தப்படும் தண்ணீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவது, சமூக விரோதிகளால் கழிப்பகம் சேதமடைவது என, பல பிரச்னைகளால், தற்போது, படுமோசமாக பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து, செயல் படாமல் இருக்கும் சிறுநீர் கழிப்பறையை, சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பயணியர் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us