sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மும்பை புறப்பட்ட விமானத்தில் டயர் வெடித்ததால் பயணியர் பீதி

/

மும்பை புறப்பட்ட விமானத்தில் டயர் வெடித்ததால் பயணியர் பீதி

மும்பை புறப்பட்ட விமானத்தில் டயர் வெடித்ததால் பயணியர் பீதி

மும்பை புறப்பட்ட விமானத்தில் டயர் வெடித்ததால் பயணியர் பீதி


ADDED : ஏப் 27, 2025 02:59 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 02:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை விமானம் நிலையத்தில் இருந்து மும்பைக்கு, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம், நேற்று மாலை 5:00 மணிக்கு புறப்பட்டது. இதில், 158 பயணியர், விமான ஊழியர்கள் எட்டு பேர் என 166 பேர் இருந்தனர்.

இந்த விமானம், ஓடுபாதையில் ஓட துவங்கியபோது, விமானத்தின் பின்பக்க டயர் ஒன்று திடீரென வெடித்து சிதறியது.

இதனால் ஓடுபாதையில், குலுங்கி குலுங்கி விமான ஓடியது, பயணியர் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியது.

சுதாரித்த விமானி, ஓடுபாதையில் விமானத்தை அவசரமாக நிறுத்தி, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள், இழுவை வண்டியுடன் ஓடுபாதைக்கு சென்றனர். இழுவை வண்டியுடன் விமானத்தை இணைத்து, பழுதடைந்த விமானங்கள் நிற்கும் பகுதிக்கு கொண்டு சென்றனர். பயணியர் அனைவரும், விமானத்தின் உள்ளே இருந்தனர்.

விமான பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் விரைந்து வந்து, வேறு டயரை உடனடியாக மாற்றினர். இதையடுத்து விமானம், பயணியருடன் இரண்டு மணி நேரம் தாமதமாக இரவு 7:00 மணிக்கு, மும்பைக்கு புறப்பட்டு சென்றது.






      Dinamalar
      Follow us