sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நடப்பதற்கு தகுதியற்ற நடைபாதை கீழ்ப்பாக்கத்தில் பாதசாரிகள் அவதி

/

நடப்பதற்கு தகுதியற்ற நடைபாதை கீழ்ப்பாக்கத்தில் பாதசாரிகள் அவதி

நடப்பதற்கு தகுதியற்ற நடைபாதை கீழ்ப்பாக்கத்தில் பாதசாரிகள் அவதி

நடப்பதற்கு தகுதியற்ற நடைபாதை கீழ்ப்பாக்கத்தில் பாதசாரிகள் அவதி


ADDED : அக் 26, 2024 03:34 AM

Google News

ADDED : அக் 26, 2024 03:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்ப்பாக்கம்,:பூந்தமல்லி நெடுஞ்சாலையில், நடப்பதற்கே தகுதியில்லாத நடைபாதையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளது. இங்கு, கீழ்ப்பாக்கத்தில் இருந்து பிராட்வேயும், பிராட்வேயில் இருந்து கீழ்ப்பாக்கம், அண்ணா நகரை நோக்கிச் செல்லும் இரு பாதைகள் உள்ளன.

இவ்வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் கடந்து செல்கின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், நடப்பதற்கே தகுதியில்லாத வகையில், நடைபாதைகள் சேதமடைந்து கிடக்கின்றன.

குறிப்பாக, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தின் எதிர்புறத்தில் உள்ள நடைபாதையில், கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால், பாதசாரிகள் பயன்படுத்த முடியாமல், சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது.

சிலர் தடுமாறி கீழே விழுகின்றனர்.

அதே சாலையில் சில இடங்களில், ஆக்கிரமிப்பு கடைகள் நிரந்தரமாக நடைபாதையிலேயே அமைந்துள்ளன.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை கண்காணித்து, உடைந்த நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us