sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆக்கிரமிப்பில் தாமரை குளம் மீட்டெடுக்க மக்கள் கோரிக்கை

/

ஆக்கிரமிப்பில் தாமரை குளம் மீட்டெடுக்க மக்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்பில் தாமரை குளம் மீட்டெடுக்க மக்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்பில் தாமரை குளம் மீட்டெடுக்க மக்கள் கோரிக்கை


ADDED : நவ 27, 2024 12:21 AM

Google News

ADDED : நவ 27, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, திருமுல்லைவாயில் குளக்கரை சாலையில், ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான தாமரை குளம் உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

குளத்தில் ஆகாய தாமரை படர்ந்துள்ளது. குப்பை கொட்டப்பட்டு, கழிவுநீர் பாயும் குளமாக மாறி வருகிறது. தற்போது, குளத்தில் 20 அடி ஆழத்திற்கு, 49 லட்சம் லிட்டர் தண்ணீர் இருப்பதாக அளவிடப்பட்டுள்ளது.

தாமரை குளத்தில் பாயும் கழிவுநீரால், சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. மொத்தம், 6.5 ஏக்கரில் இருந்த குளம் ஆக்கிரமிப்பில் சிக்கி, 4 ஏக்கராக சுருங்கி விட்டது. தொடர்ந்து ஆக்கிரமிப்புக்கள் நடப்பதால், குளம் காணாமல் போய்விடுமோ என, அப்பகுதி வாசிகள் அஞ்சுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை துார்வாரி, சுற்றுச்சுவர் அமைத்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.






      Dinamalar
      Follow us