/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.45 லட்சம் மோசடி பலே நபர் சிக்கினார்
/
ரூ.45 லட்சம் மோசடி பலே நபர் சிக்கினார்
ADDED : செப் 23, 2024 02:58 AM
குன்றத்துார்:குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம், வழுதலம்பேடு பகுதியிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் அருண் சந்த்,37.
இவர், மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 'சீட்' வாங்கித் தருவதாகவும், ராணுவத்தில் வேலை வங்கித் தருவதாகவும் கூறி, அந்த குடியிருப்பில் வசிக்கும், 15க்கும் மேற்பட்டோரிடம், 45 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டு, மோசடி செய்துள்ளார். பின், இரண்டு ஆண்டுகளாக தலைமறைவானார்.
இந்நிலையில், குன்றத்துார் அருகே அருண் சந்த் இருப்பதை பார்த்த பணத்தை இழந்தவர்கள், அவரை மடக்கிப் பிடித்து, குன்றத்துார் காவல் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தனர்.
போலீசார் அருண் சந்த்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.