sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கருடசேவையில் பெருமாள்

/

 கருடசேவையில் பெருமாள்

 கருடசேவையில் பெருமாள்

 கருடசேவையில் பெருமாள்


ADDED : ஜன 01, 2026 05:31 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்:கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, உற்சவர் பவள வண்ண பெருமாள் ஒய்யாரமாய் எழுந்தருளிய கருடசேவை நிகழ்வு நடந்தேறியது.

திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. வைகுண்ட ஏகாதசியையொட்டி, நேற்று முன்தினம், அதிகாலையில் 'சொர்க்கவாசல்' திறக்கப்பட்டது.

அப்போது, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பவள வண்ண பெருமாளை, ஏராளமான பக்தர்கள் காத்திருந்து, 'கோவிந்தா கோவிந்தா' என்ற முழக்கத்துடன், சுவாமி தரிசனம் செய்தனர்.

இரவு, உற்சவர் பவள வண்ண பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாடவீதிகளில் வலம் வைபவம் நடந்தேறியது.

பெருமாளை வரவேற்கும் விதமாக, நான்கு மாடவீதிகளிலும் பெண்கள், அர்ச்சனை செய்தும், மலர்கள் துாவியும் சுவாமியை வழிப்பட்டனர்.






      Dinamalar
      Follow us