ADDED : பிப் 03, 2026 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:: பைக்கில் சென்றவரிடம் கத்திமுனையில் மொபைல் போன் பறித்த மர்ம நபர்களை: புதுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் ராஜன், 24. இவர், கோட்டூர்புரத்தில் உள்ள 'பீரோ ஒன் ஹெல்த் சிஸ்டம்' என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் 3:30 மணியளவில், ஓ.எம்.ஆர்., சாலை வழியாக தன் யமஹா எம்.டி., பைக்கில் சென்றார்.
அப்போது, அவரை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இருவர், அவரை வழிமறித்தனர்.
பின் கத்திமுனையில் அவரது மொபைல் போனை பறித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

