sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வரதராஜபுரம் அணைக்கட்டுதாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுகோள்

/

வரதராஜபுரம் அணைக்கட்டுதாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுகோள்

வரதராஜபுரம் அணைக்கட்டுதாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுகோள்

வரதராஜபுரம் அணைக்கட்டுதாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுகோள்


ADDED : அக் 23, 2024 12:50 AM

Google News

ADDED : அக் 23, 2024 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்,

குன்றத்துார் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சியில், அணைக்கட்டுதாங்கல் ஏரி உள்ளது. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை ஆக்கிரமித்து, 800க்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இதனால், ஏரி இருக்கும் இடம் அடையாளமே மாறி, சமவெளி பகுதி போல் காட்சியளிக்கிறது. ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, அங்கு கடந்து செல்லும் அடையாறு கால்வாய் குறுக்கே தடுப்பணை அமைத்து தண்ணீரை தேக்கி வைக்க, நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.

இதையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு, அணைக்கட்டுதாங்கல் ஏரியை இணைத்து, அடையாறு கால்வாய் குறுக்கே 11 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது.

ஏரியின் உள்ளே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றாததால், இந்த தடுப்பணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை.

இதனால், மழைநீர் வீணாக வெளியேறுகிறது.

எனவே, அணைக்கட்டுதாங்கல் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடுப்பணையில் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us