sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் பிளஸ் 2 மாணவி தற்கொலை

/

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் பிளஸ் 2 மாணவி தற்கொலை

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் பிளஸ் 2 மாணவி தற்கொலை

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் பிளஸ் 2 மாணவி தற்கொலை


ADDED : மார் 06, 2024 12:42 AM

Google News

ADDED : மார் 06, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல், மதுரவாயல், ஸ்ரீலட்சுமி நகரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி, 36. இவர், அம்பேத்கர் சட்டக் கல்லுாரியில், எல்.எல்.பி., இறுதியாண்டு படித்து வருகிறார். இவரது கணவர் நடராஜன், 42; ஐ.டி., ஊழியர். ஆறு மாதங்களுக்கு முன் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர்களது மகள் சுருதிலயா, 17. விருகம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் வெளியே சென்றிருந்த தமிழ்செல்வி, இரவு 11:00 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மகள் சுருதிலயா துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'தந்தை இறந்ததில் இருந்து, சுருதிலயா மன விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

அடிக்கடி 'அப்பா பேசுகிறார்' என, தாயிடம் கூறி வந்துள்ளார். தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகள் தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us