sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.2,000 பெற்று நகராட்சியில் பிறப்பு,இறப்பு சான்று பா.ம.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

/

ரூ.2,000 பெற்று நகராட்சியில் பிறப்பு,இறப்பு சான்று பா.ம.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

ரூ.2,000 பெற்று நகராட்சியில் பிறப்பு,இறப்பு சான்று பா.ம.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

ரூ.2,000 பெற்று நகராட்சியில் பிறப்பு,இறப்பு சான்று பா.ம.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு


ADDED : ஜூலை 15, 2025 12:57 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம், தாரமங்கலம் நகரமன்ற கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் குணசேகரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு;

பா.ம.க., கவுன்சிலர் தனபால்: நகராட்சியில் சுகாதார பிரிவில் பிறப்பு, இறப்பு சான்று கேட்டு வரும் மக்களை அது சரியல்லை இது சரியில்லை என அலைக்கழிக்கின்றனர். பின் அவர்களிடம், 2,000 ரூபாய் பெற்றுக் கொண்டு சான்று வழங்குகின்றனர்.

அதேபோல் ஒரு சான்றுக்கு, ரூ.200 வீதம், ஐந்து சான்றுக்கு, 1,000 ரூபாய் பெற்றுக் கொண்டு, 200 மட்டும் பெற்றது போல் கணக்கு எழுதுகின்றனர்.

நகராட்சி தலைவர் குணசேகரன்: சுகாதார ஆய்வாளரிடம் இது சரியில்லை என கூறி, சரி செய்து கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க., கவுன்சிலர் ருக்குமணி: எங்கள் வார்டில் தெரு விளக்கு, சாலை அமைக்க பலமுறை கூறியும் செய்யவில்லை.

நகராட்சி தலைவர் குணசேகரன்: நடவடிக்கை எடுக்கப்படும்.

பா.ம.க., கவுன்சிலர் பழனிசாமி: அமரகுந்தி சாலையில் உள்ள ஏரியில், சிலர் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தண்ணீர் வீணாகிறது.

நகராட்சி தலைவர் குணசேகரன்: அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பா.ம.க., கவுன்சிலர் தனபால்: நகராட்சியில் குப்பை சேகரிக்க தனியாரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிறுவன ஒப்பந்த பணியாளர்கள் குப்பை சேகரிக்க வருவதில்லை.

அதேபோல் தரம் பிரித்து வாங்குவதில்லை என புகார் வந்தது. அவர்களே ஒப்பந்தத்தை நிறுத்திக் கொள்வதாக கூறியும், ஏன் பல மாதங்களாக வேறு நிறுவனத்தை அமர்த்தாமல் காலம் தாழ்த்தி வருகிறீர்கள்.

நகராட்சி தலைவர் குணசேகரன்: இந்த ஒப்பந்ததாரரை ரத்து செய்து, வேறு ஒப்பந்ததாரரை நியமிக்க ஒப்பந்தப்புள்ளி கோர கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது. இதை அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வு காணப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தொடர்ந்து 38 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் நகராட்சி கமிஷனர் காஞ்சனா, துணைத்தலைவர் தனம், கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us