sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'இன்ஸ்டா'வில் சிறுமியுடன் பழகிய வாலிபருக்கு 'போக்சோ'

/

'இன்ஸ்டா'வில் சிறுமியுடன் பழகிய வாலிபருக்கு 'போக்சோ'

'இன்ஸ்டா'வில் சிறுமியுடன் பழகிய வாலிபருக்கு 'போக்சோ'

'இன்ஸ்டா'வில் சிறுமியுடன் பழகிய வாலிபருக்கு 'போக்சோ'


ADDED : மே 22, 2025 12:17 AM

Google News

ADDED : மே 22, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி ஆவடி காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த சூர்யா, 19, என்கிற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை அழைத்து செல்வதற்காக, சூர்யா பொள்ளாச்சியில் இருந்து நேற்று முன்தினம் பைக்கில் ஆவடி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை, சிறுமி சூர்யாவுடன் பைக்கில் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால். சிறுமியின் பாட்டி, ஆவடி போலீசில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், மொபைல் போன் சிக்னலை வைத்து, தாம்பரத்தில் இருந்த இருவரையும் மடக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

சிறுமியை உறவினருடன் அனுப்பி வைத்த போலீசார், சூர்யாவை 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us