ADDED : செப் 28, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில், ஜி.எஸ்.டி., சாலையோரம், போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகளை, போக்குவரத்து போலீசார் தொடர்ச்சியாக, அகற்றி வருகின்றனர்.
நேற்று காலை, மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து, கடப்பேரி பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையை ஆக்கிரமித்து நிறுத்தியருந்த வாகனங்கள், விளம்பர பலகைகளை அகற்றினர்.
போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆறு கார்கள், ஒன்பது இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்து, 24,000 ரூபாய் அபராதம் வசூல் செய்தனர்.
இந்த நடவடிக்கை தொடரும் என, தாம்பரம் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.