sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரவுடி கைது போலீசார் விளக்கம்

/

ரவுடி கைது போலீசார் விளக்கம்

ரவுடி கைது போலீசார் விளக்கம்

ரவுடி கைது போலீசார் விளக்கம்


ADDED : நவ 08, 2024 12:18 AM

Google News

ADDED : நவ 08, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரும்பாக்கம், பெரும்பாக்கம் அஜய் என்ற பிரபாகரன், 19, என்பவரை, அதே பகுதி பாளையம், 44, ராமசந்திரன், 21, ராஜ்குமார், 26, ஆகியோர் தாக்கினர்.

பெரும்பாக்கம் போலீசார், ராமசந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாளையம், ராஜ்குமார் இருவரும் தலைமறைவாகினர்.

இந்நிலையில், பாளையத்தை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தபோது, காவல் நிலையத்திற்குள் புகுந்து, பாளையத்தின் ஆதரவாளர்கள் போலீசாரை சரமாரியாக தாக்கியதாக செய்தி வெளியானது.

இது குறித்து, பள்ளிக்கரணை துணை கமிஷனர் வெளியிட்டுள்ள விளக்கம்:

தலைமறைவாக இருந்த பாளையத்தை பிடிக்க, போலீசார், அவரது வீட்டிற்கு கடந்த 29ம் தேதி சென்றனர். அங்கு, அவரின் மனைவி, மகள்கள், சகோதரிகள் மற்றும் உறவினர்கள், போலீசாரை சூழ்ந்து, பாளையத்தை கைது செய்ய விடாமல் தடுத்தனர்; போலீசார் மீது மண்ணை அள்ளி வீசினர்.

இந்த செய்தி, நாளிதழ்களில் காவல் நிலையத்தில் புகுந்து, போலீசாரை தாக்கியதாக வெளியானது. காவல் நிலையத்தில் அதுபோன்ற எந்த நிகழ்வும் நடக்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us