sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நகைக்கடை அதிபரை கொல்ல முயற்சி கூலிப்படையை சுற்றி வளைத்த போலீசார்

/

நகைக்கடை அதிபரை கொல்ல முயற்சி கூலிப்படையை சுற்றி வளைத்த போலீசார்

நகைக்கடை அதிபரை கொல்ல முயற்சி கூலிப்படையை சுற்றி வளைத்த போலீசார்

நகைக்கடை அதிபரை கொல்ல முயற்சி கூலிப்படையை சுற்றி வளைத்த போலீசார்


ADDED : மார் 16, 2025 12:11 AM

Google News

ADDED : மார் 16, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி,

நகைக்கடை தொழில் அதிபரை பணத்திற்காக கடத்தி கொலை செய்ய முயன்ற கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை தெற்கு போலீஸ் இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி தலைமையில், வேளச்சேரி, தரமணி, மடிப்பாக்கம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

வேளச்சேரி - தரமணி சாலையில் நடத்திய சோதனையில், துாத்துக்குடி தாழமுத்து நகரைச் சேர்ந்த வினோத், 27, மணலியைச் சேர்ந்த பாலமுருகன், 23, மாதவரத்தைச் சேர்ந்த சுரேஷ், 35, ஆகியோரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர். தனிப்படை போலீசார் இவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

மூன்று பேரும், பரங்கிமலை காவல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நகைக்கடை தொழில் அதிபரை, பணத்திற்காக கடத்தி கொலை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.

ரகசிய தகவல், நவீன தொழில்நுட்ப உதவியுடன் இவர்களை கைது செய்தோம். இவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள். இச்சம்பவத்திற்கு, துாண்டு கோலாக இருந்தவர்கள் குறித்து, தீவிர விசாரணை நடத்துகிறோம். ஏற்கனவே, வினோத் மீது ஒரு கொலை உள்ளிட்ட ஐந்து வழக்குகள், பாலமுருகன் மீது ஆள்கடத்தல் உட்பட நான்கு வழக்குகள், சுரேஷ் மீது மூன்று வழக்குகள் உள்ளன.

இவ்வாறு போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us