/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இளம்பெண்ணை விடுதிக்கு அழைத்த போலீஸ்காரர் கைது
/
இளம்பெண்ணை விடுதிக்கு அழைத்த போலீஸ்காரர் கைது
ADDED : மே 08, 2025 12:18 AM
ஆவடி, பூந்தமல்லி, சென்னீர்குப்பம், குமரன் நகரைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். கடந்த 13ம் தேதி இரவு, இவரது கணவர், ஆவடியில் உள்ள மது கூடத்திற்கு சென்று திரும்பியபோது, இருசக்கர வாகனம் திருடு போனது. இது குறித்த புகாரின் படி, ஆவடி போலீசார், திருடு போன இருசக்கர வாகனத்தை பட்டாபிராம், காந்தி நகர் அருகே கண்டுபிடித்து, இளம்பெண்ணிடம் ஒப்படைத்தனர்.
நேற்று முன்தினம், ஆவடி குற்றப்பிரிவில் பணிபுரியும் போலீஸ்காரர் ஹரிதாஸ், 30, என்பவர், இளம்பெண்ணை தொடர்பு கொண்டு, 'நீ அழகாக இருக்கிறாய்; ஆவடி செக்போஸ்ட் அருகில் உள்ள விடுதிக்கு வா' என அழைத்துள்ளார்.
அண்ணனுடன் விடுதிக்கு சென்ற அந்த இளம்பெண், ஹரிதாஸை பிடித்து ஆவடி போலீசில் ஒப்படைத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆவடி போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், ஹரிதாஸை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். மேலும், ஹரிதாஸ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.