sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை மாணவர் ஓட்டிய ஸ்கூட்டர் மோதியதில் போலீஸ்காரர் படுகாயம்

/

போதை மாணவர் ஓட்டிய ஸ்கூட்டர் மோதியதில் போலீஸ்காரர் படுகாயம்

போதை மாணவர் ஓட்டிய ஸ்கூட்டர் மோதியதில் போலீஸ்காரர் படுகாயம்

போதை மாணவர் ஓட்டிய ஸ்கூட்டர் மோதியதில் போலீஸ்காரர் படுகாயம்


ADDED : ஏப் 02, 2025 12:16 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

பாண்டிபஜார் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்களான அனில்குமார், நாராயணமூர்த்தி, போலீஸ்காரர் அழகரசன் ஆகியோர், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை - உஸ்மான் சாலை சந்திப்பில், நேற்று அதிகாலை 3:30 மணியளவில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பாண்டிபஜார் காவல் நிலைய 'ஏ' செக்டார் போலீஸ்காரர் சென்னன், 32, வள்ளூவர் கோட்டம் பகுதியில் தேநீர் குடித்துவிட்டு, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக அதிவேகமாக 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் வந்த மூவர், காவலர் சென்னன் மீது மோதினர். இதில் அவருக்கு, நான்கு பற்கள் உடைந்தது மட்டுமல்லாமல், கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

வாகனத்தை ஓட்டி வந்தவருக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்ட நிலையில், மற்ற இருவரும் தப்பினர். காயமடைந்தவர்களை மீட்ட போலீசார், ஆம்புலன்ஸ் வாயிலாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின் மருத்துவமனைக்கு சென்ற போலீசார், விபத்து ஏற்படுத்தியவரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் கோடம்பாக்கம், முப்பன் மேஸ்திரி தெருவைச் சேர்ந்த குகன், 19, என்பதும், நுங்கம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வருவதும் தெரியவந்தது.

சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த யுவராஜ், 19, மற்றும் 15 வயது சிறுவனுடன், மெரினாவிற்கு சென்று கஞ்சா புகைத்துவிட்டு, ஸ்கூட்டரில் திரும்பும்போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. குகனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us