sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பொங்கல் சிறப்பு சந்தை காய்கறி வரத்து அதிகரிப்பு

/

 பொங்கல் சிறப்பு சந்தை காய்கறி வரத்து அதிகரிப்பு

 பொங்கல் சிறப்பு சந்தை காய்கறி வரத்து அதிகரிப்பு

 பொங்கல் சிறப்பு சந்தை காய்கறி வரத்து அதிகரிப்பு


ADDED : ஜன 14, 2026 05:50 AM

Google News

ADDED : ஜன 14, 2026 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு: கோயம்பேடு சிறப்பு சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது.

கோ யம்பேடு சந்தையில், பொங்கல் சிறப்பு சந்தை வரும் 17ம் தேதி வரை நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கடந்த மூன்று நாட்களில் மட்டும் 400 லாரி கரும்புகள் விற்பனைக்கு வந்துள்ளன. 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு 400 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடந்தாண்டு ஒரு கரும்பின் வி லை 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனையானது. இந்த ஆண்டு 25 - 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

அதேபோல், 10 செடிகள் கொண்ட மஞ்சள் கொத்து 50 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சில்லரை விலையில் ஒரு செடி மஞ்சள் கொத்து 20 - 50 ரூபாய் வரையும், இஞ்சி கொத்து ஒன்று 30 - 50 ரூபாய் வரையும் விற்பனையானது.

மற்ற காய்கறிகள் வரத்தும் அதிகமாக இருந்தது. அதேநேரம், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் வருகை குறைவாக இருந்ததால், காய்கறி விற்பனை மந்தமாக உள்ளது.

இது குறித்து சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் முத்துகுமார் கூறுகையில், 'கோயம்பேடு சந்தையில் பொங்கல் படையலுக்கான சிறப்பு காய்கறிகள் 4,000 டன் வந்துள்ளன. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் செல்கின்றனர்.

இதனால், வரத்து அதிகம் இருப்பினும், விற்பனை மந்தமாக உள்ளது' என்றார்.

மல்லிகை கிலோ ரூ.5,000

பிராட்வே, பத்திரியன் தெருவில் பூக்கடை சந்தையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இது குறித்து பூக்கடை பூ வியாபாரி சங்க தலைவர் சிவகுமார் கூறியதாவது: நாளை தை மாதம் பிறக்க உள்ளதை அடுத்து, பொங்கல் பண்டிகை, சுப நிகழ்ச்சிகளுக்கு மலர் மாலை, பூக்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. அதேநேரம், பனிப்பொழிவு காரணமாக பூக்களின்வரத்து குறைந்துள்ளது. இதனால், நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகை பூ, 4,500 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று 5,000 ரூபாய்க்கு விற்பனையானது. ஜாதி மல்லி 1,000; முல்லை 2,000 ரூபாய்க்கு விற்றது. இதேபோல மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. வரும் நாட்களில், பூக்களின் வரத்தை பொறுத்து விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us