sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ஸ்வரத்தில் இன்னிசை பூரிக்க வைத்த பூஜா

/

 ஸ்வரத்தில் இன்னிசை பூரிக்க வைத்த பூஜா

 ஸ்வரத்தில் இன்னிசை பூரிக்க வைத்த பூஜா

 ஸ்வரத்தில் இன்னிசை பூரிக்க வைத்த பூஜா


ADDED : டிச 22, 2025 05:05 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -: குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணாவின் மாணவி கர்நாடக இசைக் கலைஞர் பூஜா சுரேஷ். இவர், மந்தாரி வர்ணம், ஆதி தாளம், திஸ்ர நடையில் அமைத்து, தன் கச்சேரியை துவக்கினார்.

அடுத்து, 'ஓங்கி உலகளந்த' என்ற ஆண்டாள் திருப்பாவையை, ஸ்வரத்தில் தொடுத்து ரசிகர்களுக்கு இன்னிசையை பரிமாறினார்.

தியாகராஜர் இயற்றிய, 'எந்த நின்னே வர்ணிந்து' கீர்த்தனையை, முகாரியில் பாடி, ரூபக தாளத்தில் நிரவல் செய்து, ரசிகர்களின் உள்ளங்களை நிரப்பினார்.

அடுத்து, 'கமலசரனே' கீர்த்தனையை, அம்ரித பெஹாக் ராகம், ஆதி தாளத்தில் பாடி, இதமான உணர்வை, மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவன் அரங்கில் கொண்டு வந்தார்.

தொடர்ந்து, தியாகராஜரின் 'நன்னு பாலிம்பா' கீர்த்தனையை முக்கிய உருப்படியாக எடுத்தது, தன் அனுபவத்தை காட்டியது. இதில், ஸ்வரம் மற்றும் கோர்வைகளை நேர்த்தியாக கையாண்டது சிறப்பு.

இறுதியாக, காஞ்சி மகாபெரியவரை போற்றும் வகையில், 'கருணாரஸ' கீர்த்தனையை, யமுனா கல்யாணி ராகத்தில் பாடி பூரிப்பில் ஆழ்த்தினார். வயலின் கலைஞர் காயத்ரி வரேன்யா, மிருதங்கம் கலைஞர் பிரேம் கிருஷ்ணன் தனியாவர்த்தனத்தில் சிறப்பு சேர்த்தனர்.

கர்நாடக இசைக் கலைஞர் சங்கீதா சிவகுமார் மற்றும் வீணை கலைஞர் வசந்த்குமார் ஆகியோர், பூஜாவின் ஆரம்பகால குருக்களாவர்.

பூஜா, தன் இசை புலமைக்கு பல விருதுகளை பெற்றுள்ளார்.






      Dinamalar
      Follow us