ADDED : ஜூலை 02, 2026 01:30 AM

அ நிறம் | அளவு
திருவான்மியூர் - கிளாம்பாக்கம் செல்லும் மாநகர பேருந்தில் நேற்று முன்தினம் பெண் பயணி ஒருவர் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு மயங்கினார்.
உடனடியாக அவரை பேருந்து ஓட்டுநர் லட்சுமணன் மற்றும் நடத்துனர் கீதர் இளையராஜா ஆகியோர் துரிதமாக செயல்பட்டு தாம்பரம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து உடனடி சிகிச்சை அளிக்க உதவி செய்தனர்.
அவர்களின் சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் பாராட்டி பரிசு வழங்கினார். இந்த நிகழ்வின்போது, மாநகர் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் மோகன் உடனிருந்தார்.
