ADDED : பிப் 01, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், அம்பத்துார் அடுத்த மண்ணுார்பேட்டை, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரவின்குமார், 41. இவர் கடந்த 2019ம் ஆண்டு, கொலை வழக்கில் சிக்கி, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுநீரகம் செயலிழப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்; போகும் வழியில் உயிரிழந்தார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.