ADDED : ஆக 08, 2025 12:48 AM
அ நிறம் | அளவு
* வேளச்சேரி கீழ்கட்டளையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 60. மோசடி வழக்கில், கோடம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, 2014 டிசம்பரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு, ஜூன் 29ல், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் அவர் இறந்தார். புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
