ADDED : ஏப் 09, 2026 06:05 PM
அ நிறம் | அளவு
புழல்: உடல் நலம் பாதித்த சிறைக்கைதி, இறந்தார்.
யானைகவுனி பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார், 26. கொலை மிரட்டல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில், விசாரணை கைதியாக கடந்த 5ல் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு வலிப்பு நோய் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிறை மருத்துவர் ஆலோசனையின்படி மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், வழியிலேயே வசந்தகுமார் மரணமடைந்தார். இதுகுறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.
