sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 லாக்கரில் இருந்த 30 சவரன் திருட்டு தனியார் வங்கி ஊழியர் சிக்கினார்

/

 லாக்கரில் இருந்த 30 சவரன் திருட்டு தனியார் வங்கி ஊழியர் சிக்கினார்

 லாக்கரில் இருந்த 30 சவரன் திருட்டு தனியார் வங்கி ஊழியர் சிக்கினார்

 லாக்கரில் இருந்த 30 சவரன் திருட்டு தனியார் வங்கி ஊழியர் சிக்கினார்


ADDED : நவ 15, 2025 12:12 AM

Google News

ADDED : நவ 15, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வெளிநாடு வாழ் இந்தியரின் வங்கி லாக்கரில் இருந்த 29.75 சவரன் நகை திருட்டு போன வழக்கில், வங்கி ஊழியரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான சுரூபா ராணி சிவகுமார் என்பவர், வேளச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் லாக்கர் வைத்திருந்தார்.

அடிக்கடி லாக்கரை பயன்படுத்துவதால், லாக்கரை அணுகும் உரிமையைச் சென்னையில் வசிக்கும் அவரது தாயிடம் ஒப்படைத்திருந்தார். சில தினங்களுக்கு முன் லாக்கரில் உள்ள நகையை சரிபார்த்தபோது, 29.75 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரிய வந்தது.

இது குறித்த புகாரையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், லாக்கர் பாதுகாப்புப் பிரிவின் வங்கி ஊழியர் நகை திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவரை கைது செய்து விசாரித்ததில், திருடிய நகையை வேளச்சேரியில் உள்ள தனியார் அடகு கடையில், 21 லட்சம் ரூபாய்க்கு விற்று, பணத்தை பணிபுரியும் வங்கியிலேயே மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது.

வங்கி ஊழியரை கைது செய்த போலீசார், 20.60 லட்சம் ரூபாய் மற்றும் வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகரில் அடகு கடையில் இருந்து, 188 கிராம் உருக்கிய தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us