/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.50 லட்சம் மதிப்பு சொத்துக்கள் மோசடி பேர்வழிகளிடம் பறிமுதல்
/
ரூ.50 லட்சம் மதிப்பு சொத்துக்கள் மோசடி பேர்வழிகளிடம் பறிமுதல்
ரூ.50 லட்சம் மதிப்பு சொத்துக்கள் மோசடி பேர்வழிகளிடம் பறிமுதல்
ரூ.50 லட்சம் மதிப்பு சொத்துக்கள் மோசடி பேர்வழிகளிடம் பறிமுதல்
ADDED : ஜூன் 24, 2025 12:20 AM

ஆவடி, மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள், அந்த பணத்தில் வாங்கிய கார், இருசக்கர வாகனம், வீட்டுமனை, ஐபோன் உள்ளிட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருமுல்லைவாயில், ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர் தணிகைவேல், 43; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு, சோழபுரத்தில் 'விருட்சம் வெல்த் மேனேஜ்மென்ட்' என்ற பெயரில் 'ஆன்லைன்' பங்குச்சந்தை தொழில் செய்து வரும், அம்பத்துாரைச் சேர்ந்த சிவசங்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த 2021 - 22ல், தன் நிறுவனத்தில் முதலீடு செய்தால், 5 சதவீதம் கமிஷன் தருவதாக, சிவசங்கர் தணிகைவேலிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதன்படி, தணிகைவேல் குடும்பத்தினர், நண்பர்களிடம் இருந்து 3.20 கோடி ரூபாய் பெற்று, சிவசங்கர் வங்கி கணக்கில் அனுப்பியுள்ளார். ஆனால், மேற்கூறியபடி கமிஷன் தரவில்லை.
பணத்தை திருப்பி கேட்டபோது, 74 லட்சம் ரூபாய் மட்டும் சிவசங்கர் திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை, திருப்பி தராமல், அடியாட்களை வைத்து, சிவசங்கர் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் விசாரித்து, தலைமறைவாக இருந்த அம்பத்துாரைச் சேர்ந்த சிவசங்கர், 43, அண்ணனுாரைச் சேர்ந்த ராஜிவ்காந்தி, 40, ஆகியோரை கைது செய்தனர். கடந்த 8ம் தேதி இருவரையும் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், தனிப்படை போலீசார், கடந்த 19ம் தேதி இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணைக்கு பின், இருவரும் மோசடி செய்த பணத்தில் வாங்கிய, இரண்டு கியா கார்கள், தலா ஒரு ஹுண்டாய் மற்றும் வோல்க்ஸ்வாகன் என நான்கு சொகுசு கார், இரண்டு டி.வி.எஸ்., ஸ்கூட்டி வாகனங்கள், வேலுாரில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டுமனை, 2 ஆப்பிள் ஐபோன் என, 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.