/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுத்தியலால் முதியவரை தாக்கியவருக்கு 'காப்பு'
/
சுத்தியலால் முதியவரை தாக்கியவருக்கு 'காப்பு'
ADDED : செப் 21, 2024 12:23 AM
சென்னை, முன்விரோதம் காரணமாக, முதியவரை சுத்தியலால் தலையில் தாக்கி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
எழும்பூர், டாக்டர் சந்தோஷ் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், முதல் தளத்தில் வசிப்பவர் சேகர், 65. இவர் நேற்று முன்தினம் மதியம், வீட்டின் கீழே உள்ள மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளார்.
அப்போது, அதே குடியிருப்பின் 12வது தளத்தில் வசிக்கும் முனீஷ்குமார் என்பவர், முன்விரோதம் காரணமாக சுத்தியலால் சேகரின் தலையில் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சேகரை, அங்கிருந்தோர் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலை முயற்சியில் ஈடுபட்ட முனீஷ்குமார், 44, என்பவரை நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முனீஷ்குமார் மீது, ஐந்து குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.