/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரியம்மாவை வெட்டிய வாலிபருக்கு 'காப்பு'
/
பெரியம்மாவை வெட்டிய வாலிபருக்கு 'காப்பு'
ADDED : அக் 29, 2024 12:13 AM
சென்னை,
குடும்ப தகராறில் பெரியம்மாவை கத்தியால் வெட்டியவரை கைது செய்த போலீசார், தலைமறைவான மகனை தேடி வருகின்றனர்.
ராயப்பேட்டை, பி.எம்.தர்கா பகுதியைச் சேர்ந்தவர் மீனா, 40. இவரது மகன் சீனு, 26.
நேற்று முன்தினம் இரவு சீனு, தன் சித்தி குணவதி, 36, அவரது மகன் சந்தோஷ்,18, ஆகியோருடன் வந்து, தன் தாய் மீனாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரத்தில் சீனு, சந்தோஷ் ஆகியோர், கத்தியால் மீனாவின் தலையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த மீனா, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், சந்தோஷை நேற்று கைது செய்தனர். தலைமறைவான சீனு மற்றும் குணவதியை தேடி வருகின்றனர்.