sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சைதை விடுதியில் போராட்டம் வெளி மாணவர்கள் துாண்டுதல்?

/

 சைதை விடுதியில் போராட்டம் வெளி மாணவர்கள் துாண்டுதல்?

 சைதை விடுதியில் போராட்டம் வெளி மாணவர்கள் துாண்டுதல்?

 சைதை விடுதியில் போராட்டம் வெளி மாணவர்கள் துாண்டுதல்?


ADDED : டிச 13, 2025 05:10 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'சைதாப்பேட்டை, எம்.சி., ராஜா விடுதியில் நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு, வெளி மாணவர்களின் துாண்டுதலே காரணம்' என, ஆதிதிராவிடர் நலத்துறை தெரிவித்துள்ளது.

ஆதிதிராவிட நலத்துறை வெளியிட்ட அறிக்கை:

சைதாப்பேட்டை எம்.சி., ராஜா கல்லுாரி மாணவர் புதிய விடுதியில், 484 மாணவர்கள் உள்ளனர். இங்கு, தரமான உணவு, உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், 'அமுதசுரபி' செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் மாணவர்களின் கருத்து, விடுதி காப்பாளர்கள் வாயிலாக பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யப்படுகிறது.

உணவு தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் முடியும் நிலையில் உள்ளது. எனவே, புதிய டெண்டர் கோரும்போது, புதிய உணவு பட்டியலின்படி, மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும்.

மாணவர் அல்லாத சில வெளிநபர்களின் துாண்டுதலால், விடுதியில் மாணவர் போராட்டம் என்ற பெயரில், தவறான தகவல்கள் பரப்பப்பட்டு உள்ளன.

புதிய, பழைய மாணவர் விடுதிகளில், போதிய வசதியுடன் மாணவர்கள் தங்கியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us