sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

11வது நாளாக எண்ணுாரில் போராட்டம்

/

11வது நாளாக எண்ணுாரில் போராட்டம்

11வது நாளாக எண்ணுாரில் போராட்டம்

11வது நாளாக எண்ணுாரில் போராட்டம்


ADDED : ஜன 07, 2024 12:31 AM

Google News

ADDED : ஜன 07, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர் சென்னை, எண்ணுார், பெரியகுப்பத்தில் இயங்கிய, 'கோரமண்டல் இன்டர்நேஷனல்' நிறுவனத்திற்கு, கடலில் இருந்து நிறுவன வளாகத்தில் உள்ள ராட்சத தொட்டிக்கு, அமோனியா இறக்குமதி செய்யும் குழாய் உள்ளது.

டிச., 26 ம் தேதி, நள்ளிரவு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே, மிக்ஜாம் புயலின் போது குழாய் உடைப்பு ஏற்பட்டிருந்ததால், 2 டன் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.

இதில், பெரியகுப்பம், சின்னகுப்பம், எர்ணாவூர் குப்பம் உள்ளிட்ட, 32 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. வாயு கசிவிற்கு காரணமான நிறுவனத்தை நிரந்தரமாக மூடக்கோரி, எண்ணுார் மக்கள் பாதுகாப்பு குழு என்ற பெயரில், பெரியகுப்பத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று, 11வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

இதனிடையே, வாயு கசிவிற்கு காரணமான கோரமண்டல் நிறுவனத்தை மூடக்கோரி மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்விடம் வடசென்னை எம்.பி., கலாநிதி கோரிக்கை மனு அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us