ADDED : பிப் 27, 2024 12:16 AM
அ நிறம் | அளவு
சென்னை, அரசு துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும், 4 சதவீத இடஒதுக்கீட்டில், ஒரு சதவீதம் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்.
'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வை மாற்றுத்திறனாளிகள், கிண்டியில் நேற்று போராட்டம் நடத்தினர்.
இதில், 14 பெண்கள், 50 ஆண்கள் ஈடுபட்டனர். போலீசார், அவர்களை கைது செய்து, மண்டபத்தில் அடைத்து வைத்து, மாலை விடுவித்தனர்.
