/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது - 'பாயின்ட் ஆப் சேல்' கருவியுடன் 'குடி'மகன்கள் ஓட்டம்
/
பொது - 'பாயின்ட் ஆப் சேல்' கருவியுடன் 'குடி'மகன்கள் ஓட்டம்
பொது - 'பாயின்ட் ஆப் சேல்' கருவியுடன் 'குடி'மகன்கள் ஓட்டம்
பொது - 'பாயின்ட் ஆப் சேல்' கருவியுடன் 'குடி'மகன்கள் ஓட்டம்
ADDED : ஏப் 08, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ராமாபுரம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 56; தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடை மேற்பார்வையாளர்.
நேற்று முன்தினம் இரவு 9:45 மணிக்கு, கடைக்கு வந்த 'குடி'மகன்கள் இருவர், குறிப்பிட்ட மது வகையை கேட்டு, வங்கி ஏ.டி.எம்., கார்டு கொடுத்துள்ளனர்.
கடையில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் கார்டை உபயோகப்படுத்தியபோது, சர்வர் இணைப்பு கிடைக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த இருவரும், அந்த கருவியை பறித்து, அங்கிருந்து தப்பினர்.
இதுகுறித்து ஏழுமலை புகாரின்படி, தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

