ADDED : மார் 18, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரோம்பேட்டை, :குரோம்பேட்டை, ராதா நகர் ரயில்வே கேட் எல்.சி., -27ல், சுரங்கப்பாதை பணிகள், 2007ல் துவக்கப்பட்டன.
ரயில்வே பகுதியில் பணிகள் முடிந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
கடந்த 2019ல், 15.47 கோடி ரூபாய்க்கு 'டெண்டர்' விடப்பட்டு, நெடுஞ்சாலைத் துறை பணிகள் துவங்கின. தண்டவாளத்தின் கிழக்கு பகுதியில், 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில், மேற்கு பகுதியில் பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

