sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஐ.எஸ்.ஐ., உரிமமின்றி அலாய் வீல் தயாரிப்பு தொழிற்சாலையில் சோதனை

/

ஐ.எஸ்.ஐ., உரிமமின்றி அலாய் வீல் தயாரிப்பு தொழிற்சாலையில் சோதனை

ஐ.எஸ்.ஐ., உரிமமின்றி அலாய் வீல் தயாரிப்பு தொழிற்சாலையில் சோதனை

ஐ.எஸ்.ஐ., உரிமமின்றி அலாய் வீல் தயாரிப்பு தொழிற்சாலையில் சோதனை


ADDED : மார் 20, 2025 12:50 AM

Google News

ADDED : மார் 20, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம், வல்லம் வடகால் சிப்காட் தொழில் பூங்காவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில், ஐ.எஸ்.ஐ., உரிமம் இன்றி, அலுமினிய அலாய் வீல் தயாரிப்பு நடப்பதாக, பி.ஐ.எஸ்., என்ற இந்திய தர நிர்ணய ஆணையத்திற்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, பி.ஐ.எஸ்., இணை இயக்குநர்கள் அருண் புச்சகாயாலா, ஸ்ரீஜித் மோகன் உள்ளிட்ட குழுவினர், நேற்று முன்தினம், தொழிற்சாலையில் திடீர் சோதனை நடத்தினர்.

அதில், தரக்கட்டுப்பாட்டு உத்தரவை மீறி, அலுமினியம் மற்றும் அலுமினிய உலோகக் கலவைகள் பயன்படுத்தி, ஐ.எஸ்.ஐ., முத்திரையின்றி, அலுமினிய அலாய் வீல் தயாரிப்பது தெரிய வந்தது. நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கைக்கு, அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். குற்றம் நிரூபணமானால், இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது உற்பத்தி பொருட்களின் மதிப்பில், 10 சதவீதம் வரை அபராதம் விதிக்க முடியும் என, பி.ஐ.எஸ்., அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us