sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தண்டவாள பராமரிப்பு பணி மெட்ரோ சேவையில் மாற்றம்

/

தண்டவாள பராமரிப்பு பணி மெட்ரோ சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணி மெட்ரோ சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணி மெட்ரோ சேவையில் மாற்றம்


ADDED : செப் 06, 2025 11:18 PM

Google News

ADDED : செப் 06, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, வரும் 9ம் தேதி முதல் அக்., 19 வரை, மெட்ரோ ரயில் சேவையில், சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, சென்னை சென்ட்ரல் -- பரங்கிமலை வழித்தடத்திலும், விம்கோ நகர் -- விமான நிலைய வழித்தடத்திலும், தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.

இந்த பராமரிப்பு பணிகள், இரு வழித்தடங்களிலும், வரும் 9ம் தேதி முதல் அக்., 19 வரை காலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை நடக்கும்.

இந்தக் காலகட்டத்தில் ரயில்கள் காலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை வழக்கமான, 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

காலை 6:30 மணிக்குப் பின், மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் எவ்வித மாற்றமும் இன்றி இயங்கும்.

பராமரிப்புப் பணி காரணமாக, பயணியர் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உதவி மையத்தை, 1860- 425 -1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***






      Dinamalar
      Follow us