sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செயல்படாத டிஜிட்டல் பலகைகள் ரயில்வே பயணியர் புகார்

/

செயல்படாத டிஜிட்டல் பலகைகள் ரயில்வே பயணியர் புகார்

செயல்படாத டிஜிட்டல் பலகைகள் ரயில்வே பயணியர் புகார்

செயல்படாத டிஜிட்டல் பலகைகள் ரயில்வே பயணியர் புகார்


ADDED : மே 20, 2025 01:32 AM

Google News

ADDED : மே 20, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை கோட்டத்தின்கீழ் உள்ள 160 ரயில் நிலையங்களில், பெரும்பாலும் புறநகர் ரயில் நிலையங்கள்தான். இவற்றில், புதிதாக டிஜிட்டல் தகவல் பலகைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை சரியாக செயல்படுவதில்லை என, புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:

சென்ட்ரல், கடற்கரை, ஆவடி, வில்லிவாக்கம், பரங்கிமலை, கிண்டி, பழவந்தாங்கல், குரோம்பேட்டை, தாம்பரம் சானிட்டோரியம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில், நவீன டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு நடைமேடையில் இரண்டு இடங்களில் இந்த பலகை இருக்கிறது. மின்சார ரயில் வழித்தடம், புறப்பாடு மற்றும் வருகை நேரம், நடைமேடை உள்ளிட்ட விபரங்கள் இதில் இடம் பெறுகின்றன.

கடந்த சில நாட்களாக இந்த டிஜிட்டல் பலகைகள் சரியாக செயல்படுதில்லை. அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது.

பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்டுள்ள இந்த பலகை உடனடியாக சீரமைத்து, முழு பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

***






      Dinamalar
      Follow us