/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.135 கோடியில் நவீன சிக்னல்: ரயில்வே அனுமதி
/
ரூ.135 கோடியில் நவீன சிக்னல்: ரயில்வே அனுமதி
ADDED : அக் 01, 2025 02:53 PM
சென்னை:
சென்னை ரயில் கோட்டத் துக்கு உட்பட்ட 11 ரயில் நிலையங்களில் 135 கோடி ரூபாயில் 'எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங்' என்ற நவீன சிக்னல் முறையை செயல்படுத்த, வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
'எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங்' என்பது ரயில்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும் இயக்க, ரயில்வே கையாளும் இயந்திர தொழில்நுட்ப கட்டமைப் பாகும். இது இயந்திரவியல், மின்னியல் மின்சார வியல் தொடர்புடையது.
சென்னை கோட்டத்தி ல், காட்பாடி - ஜோலார் பேட்டை இடையே உள்ள காட்பாடி சந் திப்பு, குடியாத்தம், வளத்துார், மேல்பட்டி, பச்சக்குப்பம், ஆம்பூர், வின்னமங்கலம், வாணியம்பாடி உட்பட 11 ரயில் நிலைய பகுதிகளில், எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் தொழில்நுட்பம் உடைய அதிநவீன சிக்னல் திட்டம் செயல் படுத்த திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் ரயில்வே வாரியம், இத்திட்டப்பணிகளுக்கு 135.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நவீன சிக்னல் தொழில்நுட்பம் செயல்படுத்தும்போது, ரயில்களின் வேகம் மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.