/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவீஸ்வரர் கோவில் உயர்த்தும் பணி நிறைவு
/
ரவீஸ்வரர் கோவில் உயர்த்தும் பணி நிறைவு
ADDED : ஜன 27, 2026 05:43 AM

வியாசர்பாடி: வியாசர்பாடியில், 800 ஆண்டுகள் பழமையான ரவீஸ்வரர் கோவில், அறநிலையத் துறை கீழ் உள்ளது. சூரிய கதிர் ராஜகோபுரம் வழியாக, நேரடியாக நந்தி மற்றும் மூலவர் சிவலிங்கத்தின் மீது விழும்.
சில ஆண்டுகளாக அந்த நிகழ்வு நடக்கவில்லை. கோவில் தரைதளத்தில் இருந்து 5 அடிக்கு பள்ளத்தில் இருப்பதால் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழவில்லை என்பது தெரிந் தது.
அதனால், கோவிலை தரை மட்டத்திலிருந்து உயர்த்துவது, மூலவர், அம்மன் மகா மண்டபம், நந்தி கொடிமரம், சண்டிகேஸ்வரர் ராஜகோபுரம் ஆகியவற்றை 8.6 அடி உயரம் உயர்த்த முடிவானது. 3 கோடி ரூபாய் செலவில், 2024, ஜூலை, 27ல் பணி துவங்கியது.
நவீன தொழில் நுட்பமான ஜாக்கி உதவியுடன் கோவிலை உயர்த்தும் பணி நடந்து வந்த நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளது.
பிப்., 22ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

