/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மண்டல குழு தலைவர்
/
1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மண்டல குழு தலைவர்
1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மண்டல குழு தலைவர்
1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மண்டல குழு தலைவர்
ADDED : நவ 28, 2025 05:15 AM

திருவொற்றியூர்: உதயநிதி பிறந்த நாளையொட்டி, 1,000 பேருக்கு, அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை, தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு வழங்கினார்.
தமிழக துணை முதல்வரும், தி.மு.க., இளைஞரணி செயலருமான உதயநிதி பிறந்தநாளை, தமிழகம் முழுதும் தி.மு.க., வினர், விமரிசையாக கொண்டாடினர்.
அதன்படி, திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலரும், மண்டல குழு தலைவரான தி.மு.தனியரசு ஏற்பாட்டில், 1,000 பேருக்கு, அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தேரடி சன்னிதி தெருவில், நேற்று மதியம் நடந்தது.
இதில், தி.மு.க., துணை பொதுச் செயலர் ராஜா, வடசென்னை எம்.பி., கலாநிதி, மாவட்ட செயலர் சுதர்சனம், திருவொற்றியூர் எம்.எல்.ஏ., - கே.பி சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று, அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

