sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இதய பெருநாடி வீக்கத்திற்கு எம்.ஜி.எம்.,மில் மறுவாழ்வு

/

இதய பெருநாடி வீக்கத்திற்கு எம்.ஜி.எம்.,மில் மறுவாழ்வு

இதய பெருநாடி வீக்கத்திற்கு எம்.ஜி.எம்.,மில் மறுவாழ்வு

இதய பெருநாடி வீக்கத்திற்கு எம்.ஜி.எம்.,மில் மறுவாழ்வு


ADDED : ஜூன் 06, 2025 12:30 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, இதய பெருநாடி வடிகுழல் வீக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மலர் அடையாறு மருத்துவமனை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, மறுவாழ்வு அளித்துள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவமனையின் இதய ரத்தநாள அறுவை சிகிச்சை துறை டாக்டர் சஞ்சய் தியோடர் கூறியதாவது:

இதய பெருநாடி வடிகுழல்கள் வீக்கத்துடன், உயிருக்கு ஆபத்தான இதய பிரச்னையால் பாதிக்கப்பட்ட 58 வயது நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வலது கரோனரி சைனஸ் பகுதியில் அமைந்திருந்த ரத்தநாள வீக்கம், இதயத்திலிருந்து செல்லும் ரத்த ஓட்டத்தை தடை செய்து அழுத்தியதால், இதய பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதனால், சுவாசிப்பதில் சிரமம், மார்பில் அசவுகரியம், மயக்கம் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வந்தார். மேலும், நீரிழிவு மற்றும் இடது சிறுநீரக பாதிப்பு ஆகியவையும் நோயாளிக்கு இருந்தது.

மருத்துவமனையில் உள்ள தொழில்நுட்பங்களின் உதவியுடன், இதய சிகிச்சை நிபுணர்கள் மதன் மோகன், கமலக்கண்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நோயாளிக்கு, மிக துல்லியமான முறையில் இதய ரத்தநாள வீக்கத்தை சரிசெய்யும் அறுவை சிகிச்சை செய்தனர். பின், நோயாளி இயல்பு நிலைக்கு திரும்பினார்.

இதன் வாயிலாக, இதய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, நோயாளிக்கு தவிர்க்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினர்.






      Dinamalar
      Follow us