sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பஸ் நிலையத்தில் பேனர்கள் அகற்றம்

/

பஸ் நிலையத்தில் பேனர்கள் அகற்றம்

பஸ் நிலையத்தில் பேனர்கள் அகற்றம்

பஸ் நிலையத்தில் பேனர்கள் அகற்றம்


ADDED : மே 19, 2025 01:51 AM

Google News

ADDED : மே 19, 2025 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி,:ஆவடி, பக்தவத்சலபுரத்தில் 5.68 ஏக்கர் பரப்பில், ஆவடி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், பேருந்து பயணியருக்கு ஏற்ப, போக்குவரத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், தொழிற்சங்கத்தினர் பேருந்து நிலையத்தில் பல இடங்களில் கட்சி பேனர்கள் வைத்திருந்தனர்.

இதனால், ஓட்டுநர்கள் கவனம் சிதறி, விபத்து ஏற்படும் சூழல் உருவானது. அதேபோல், அங்கு வைக்கப்பட்டு இருந்த பேனரை காரணம் காட்டி, தனிநபர்கள் சிலர், பேருந்து நிலையத்திற்குள் அத்துமீறி ஆட்டோக்களை நிறுத்தி வந்தனர். இதனால், பேருந்துகள் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து, நம் நாளிதழில் 15ம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. ஆட்டோக்கள் நிறுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us