sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றம்

/

நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றம்

நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றம்

நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றம்


ADDED : மே 14, 2025 12:20 AM

Google News

ADDED : மே 14, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைக்காரர்கள் மற்றும் வாகன ஓட்டிகளால் நிறுத்தப்படும் வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் , 55 போக்குவரத்து காவல் நிலையங்கள் உள்ளன. அந்தந்த காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், நடைபாதை ஆக்கிரமித்து, கடைக்காரர்கள் மற்றும் வாகன ஓட்டிகளால் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி கூறியதாவது :

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், நடைபாதை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்த முடியாத வகையில், தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆனால், நாளடைவில் தடுப்பு கற்கள் உடைந்து விட்டன. சில இடங்களில் வாகனங்களை நிறுத்ததிற்காகவே, கற்களை உடைத்து அகற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனால் பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், சாலையில் நடந்து செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படுவதோடு, சாலைகளில் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் விதமாக, சென்னை காவல் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதியில் நடைபாதை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us