sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருவொற்றியூர் நீச்சல் குளம் புனரமைக்க கோரிக்கை

/

திருவொற்றியூர் நீச்சல் குளம் புனரமைக்க கோரிக்கை

திருவொற்றியூர் நீச்சல் குளம் புனரமைக்க கோரிக்கை

திருவொற்றியூர் நீச்சல் குளம் புனரமைக்க கோரிக்கை


ADDED : ஏப் 25, 2025 12:26 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டல அலுவலகம் அருகே, காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட, சண்முகனார் பூங்கா உள்ளது. இந்த பூங்காவினுள், 2006ம் ஆண்டு, நீச்சல் குளம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

பின், பல்வேறு காலகட்டங்களில் நீச்சல் குளம் பராமரிப்பின்றி மூடப்பட்டு, மீண்டும் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

இந்நிலையில், 2022ல், நீச்சல் குளம் பராமரிப்பு பணியை மேற்கொண்டிருந்த தனியார் ஒப்பந்த நிறுவனம், அப்படியே விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, நீச்சல் குளத்தில் இருந்த மின்மோட்டார்கள் உள்ளிட்ட பொருட்கள் களவு போனதாக கூறப்படுகிறது. தற்போது, நீச்சல் குளம் முழுதும் பாசி படர்ந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

தற்போது, கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், நீச்சல் குளத்தை பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், திருவொற்றியூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிவாசிகளும் பயன்பெறுவர்.

நீச்சல் குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.






      Dinamalar
      Follow us