sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சித்தேரி நீர்வரத்து கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை

/

சித்தேரி நீர்வரத்து கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை

சித்தேரி நீர்வரத்து கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை

சித்தேரி நீர்வரத்து கால்வாய் துார்வாரி சீரமைக்க கோரிக்கை


ADDED : செப் 23, 2024 02:57 AM

Google News

ADDED : செப் 23, 2024 02:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேடவாக்கம்:மேடவாக்கம் சித்தேரி நீர்வரத்து மற்றும் உபரிநீர் வெளியேறும் கால்வாய் புதர்மண்டி, ஆகாயத்தாமரை செடி சூழ்ந்துள்ளதால், மழைக்காலத்தில் நீரோட்டம் தடைபட்டு, சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும், பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது:

மேடவாக்கம் பெரிய ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், போக்கு கால்வாய் வழியாக சித்தேரியை வந்தடைகிறது. இதிலிருந்து வெளியேறும் உபரிநீர், பள்ளிக்கரணை ஏரியை சென்றடைகிறது.

சித்தேரியின் நீர்வரத்து பாதையும், நீர் வெளியேறும் பாதையும் புதர்மண்டி, பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழிகிறது. தவிர, ஏரி முழுதும் ஆகாய தாமரைகளால் நிரம்பி உள்ளன.

கடந்த 1990 வரை, சித்தேரியிலிருந்து குடங்களில் நீர்பிடித்து, அதையே இப்பகுதி மக்கள் சமையலுக்கு பயன்படுத்தினர்.

அவ்வளவு துாய்மையான தண்ணீர் தற்போது, கழிவுநீர் கலந்து, சாக்கடையாக மாறி, துர்நாற்றம் வீசுகிறது.

தவிர, செடி, கொடி, மரங்கள் முளைத்து, ஆகாயத்தாமரை நிறைந்து, புதர் மண்டி, அழிவின் விளிம்பில் உள்ளது.

எனவே, சித்தேரியை சீரமைக்கவும், ஆக்கிரமிப்பாளர்களிடம் உள்ள நிலப் பரப்பை மீட்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர, ஏரியின் நான்கு பக்கங்களிலும் சுற்று சுவர் எழுப்பி, கரைகளை பலப்படுத்தி, சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க வேண்டும்.

இவ்வாறு, பகுதிமக்கள் புகார் எழுப்பியுள்ளனர்.






      Dinamalar
      Follow us