sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புதைவட கேபிள்கள் அமைக்க பகுதி சபை கூட்டத்தில் கோரிக்கை

/

புதைவட கேபிள்கள் அமைக்க பகுதி சபை கூட்டத்தில் கோரிக்கை

புதைவட கேபிள்கள் அமைக்க பகுதி சபை கூட்டத்தில் கோரிக்கை

புதைவட கேபிள்கள் அமைக்க பகுதி சபை கூட்டத்தில் கோரிக்கை


ADDED : பிப் 16, 2024 12:24 AM

Google News

ADDED : பிப் 16, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார், எர்ணாவூரில் உள்ள நான்காவது வார்டில், நேற்று காலை பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இதில், உதவி பொறியாளர் அன்னலட்சுமி, கவுன்சிலர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மேல்நிலை மின்சார கம்பி இணைப்புகளை, புதைவட கேபிள்களாக மாற்றி தர வேண்டும். ஆதிதிராவிடர் காலனி பகுதிக்கு, மின் இணைப்பு வழங்க மறுக்கப்படுகிறது.

அரசு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். குப்பை சேகரிப்பு பணியில் கவனம் செலுத்த வேண்டும். சொத்துவரி விதிக்க வேண்டும்.

விளையாட்டு மைதானத்தை சீரமைத்து, கால்பந்து விளையாட்டு மைதானமாக மாற்றி தர வேண்டும். குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். பொது குழாய்கள் அமைத்து தர வேண்டும்.

மேலும், திருவீதியம்மன் நகரில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட வேண்டும். சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. போலீசார் அடிக்கடி ரோந்து வர வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். இக்கூட்டத்தில், பல துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us