ADDED : ஆக 16, 2026 03:51 PM
அ நிறம் | அளவு
கோவிலம்பாக்கம்: பள்ளி அருகே செயல்படும், ‘டாஸ்மாக்’ மதுக்கடையை அகற்ற வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேடவாக்கம் – கோவிலம்பாக்கம் பிரதான சாலையில், பவானி திருமண மண்டபம் அருகே ‘டாஸ்மாக்’ மதுபானக்கடை அமைந்துள்ளது.
இதனருகே, 100 மீட்டர் தொலைவிற்குள் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் 2,000க்கும் மேற்பட்ட மாணவ- – மாணவியர், பெண்கள் மற்றும் பொதுமக்கள், இந்த வழியாக தான் சென்று வருகின்றனர்.
இங்கு மது அருந்த வருவோரால், பள்ளி மாணவ – மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே, மாணவர்களின் எதிர்காலம் மற்றும் பொது அமைதியைக் கருத்தில் வைத்து, இக்கடையை அப்பகுதியில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
