sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மழைநீர் வடிகால் சீரமைப்பால் பகுதிவாசிகள் நிம்மதி

/

மழைநீர் வடிகால் சீரமைப்பால் பகுதிவாசிகள் நிம்மதி

மழைநீர் வடிகால் சீரமைப்பால் பகுதிவாசிகள் நிம்மதி

மழைநீர் வடிகால் சீரமைப்பால் பகுதிவாசிகள் நிம்மதி


ADDED : அக் 24, 2024 12:24 AM

Google News

ADDED : அக் 24, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை, நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், மழைநீர் வடிகாலை சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன.

சென்னை, அண்ணா நகர் மண்டலம், 102வது வார்டில், அமைந்தகரை, பாரதிபுரம் உள்ளது. இங்கு, மொத்தம் நான்கு தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.

அமைந்தகரை கூவம் அருகில் உள்ள இக்குடியிருப்பின் இரண்டாவது தெருவில், 40 ஆண்டுகள் பழமையான மழைநீர் வடிகால் உள்ளது.

இதை சீரமைப்பதாகக் கூறி, கடந்த மாதம் மாநகராட்சியினர் உடைத்தனர்.

இதனால், பல வீடுகளின் நுழைவாயிலில் பள்ளம் ஏற்பட்டதால், விபத்து அபாயம் நிலவியது.

வடிகாலில் தேங்கியுள்ள நீரால் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளதாக, குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து நம் நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள், உடைக்கப்பட்ட இந்த மழைநீர் வடிகாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், குடியிருப்புவாசிகள் நிம்மதியடைந்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us