/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எண்ணுார், மணலியில் சாலைகள் துண்டிப்பு 500 வீடுகளில் புகுந்த மழைநீர்
/
எண்ணுார், மணலியில் சாலைகள் துண்டிப்பு 500 வீடுகளில் புகுந்த மழைநீர்
எண்ணுார், மணலியில் சாலைகள் துண்டிப்பு 500 வீடுகளில் புகுந்த மழைநீர்
எண்ணுார், மணலியில் சாலைகள் துண்டிப்பு 500 வீடுகளில் புகுந்த மழைநீர்
ADDED : டிச 01, 2024 12:39 AM

திருவொற்றியூர், எண்ணுார், திருவொற்றியூர், மணலி, மணலிபுதுநகர் போன்ற பகுதிகளில், சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.
l மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் எண்ணுார், பாரதியா நகர் - நேதாஜி நகர் வரையிலான, எண்ணுார் விரைவு சாலையில், 500 அடி துாரத்திற்கு முழங்கால் அளவு மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது
l எண்ணுார், தாழங்குப்பம் கடற்கரையில் பலத்த காற்று வீசி, மணல் சுழன்றடித்ததால், ஸ்கூட்டர், பைக், இலகுரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. அப்பகுதியில், தற்காலிகமாக கூடாரம் அமைத்து தங்கியிருக்கும், 20 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தவிப்பிற்குள்ளாகினர்
l பகிங்ஹாம் கால்வாயில், இயல்பை காட்டிலும், 5அடி உயரத்திற்கு மழைநீர் ஆர்பரித்து செல்வதால், 4, 6, 7 ஆகிய வார்டுகளில், இணைப்பு கால்வாய்களின் மதகுகள் அடைக்கப்பட்டு, ராட்சத மின்மோட்டார்கள் வழியாக, மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏழாவது வார்டின், ராஜாஜி நகர், வெற்றி விநாயகர் நகர் பகுதிகளில், 500 வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது
l மணலிபுதுநகர், இடையஞ்சாவடியில், காற்றில் மின்வயர் அறுந்து விழுந்ததில், சுரேஷ்குமார், என்பவருக்கு சொந்தமான எருமைமாடு ஒன்று பலியானது.