/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையோர வியாபாரிகள் எழும்பூரில் போராட்டம்
/
சாலையோர வியாபாரிகள் எழும்பூரில் போராட்டம்
ADDED : பிப் 21, 2024 01:39 AM

சென்னை:சென்னை, ராஜரத்தினம் அரங்கம் அருகே, சாலையோர வியாபாரிகள் நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்துதல், நகர விற்பனைக்குழு செயல்பட அலுவலகத்தை ஒதுக்கீடு செய்தல் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சென்னை மாநகர சிறுகடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் கிருஷ்ணன் கூறியதாவது:
மத்திய அரசு, சாலையோர வியாபாரிகளை பாதுகாக்கும் வகையிலான சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அச்சட்டத்தை, மாநகராட்சி செயல்படுத்த மறுக்கிறது.
சென்னையில் 35,588 சாலையோர வியாபாரிகள் இருக்கும் நிலையில், 12,000 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி, சாலையோர வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

